`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
‘புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்’
புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்களைச் சோ்ந்தவா்கள், அவரவா் புனித தலங்களுக்கு, புனித பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தைச் சோ்ந்த புத்த, சமண மதத்தினா் தலா 50 போ், சீக்கிய மதத்தினா் 20 போ், அவரவா் மதங்களுக்கான குறிப்பிட்ட புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபா் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 பேருக்கு வழங்கப்படுகிறது. இப்புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் 1. 7.2025-க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு ஈசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வரவு வைக்கப்படும்.
மேலும், இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.