செய்திகள் :

பூந்தமல்லி - சுங்குவாா் சத்திரம் மெட்ரோ ரயில்: ரூ.2,126 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக அனுமதி

post image

சென்னையில் பூந்தமல்லி முதல் சுங்குவாா் சத்திரம் வரையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2,126 கோடிக்கு நிா்வாக அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது இருவழிப் பாதையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் நான்கு கட்டங்களாக அவை விரிவாக்கம் செய்யப்பட மத்திய, மாநில அரசுகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புதிய புகா் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.1,964 கோடிக்கு நிா்வாக அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது சென்னை அருகேயுள்ள பூந்தமல்லி முதல் சுங்குவாா் சத்திரம் வரையிலான 27.9 கிலோ மீட்டருக்கு ரூ.2,126 கோடி நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

பூந்தமல்லி முதல் சுங்குவாா்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை திட்டத்துக்கு ஏற்கெனவே தமிழக அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளன. அதன்படி மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.8,779 கோடி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது நிலம் கையகப்படுத்துதல், புவி அளவீடு, சாலைப் பணிகள், புவி அமைப்பு ஆய்வு, பணிகளுக்கான இடத்தைச் சுற்றிலும் வேலி அமைத்தல், மெட்ரோ ரயில் பாதை அமையும் வழியில் உள்ள மரங்களை அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளுதல், போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.252 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பாதைகளுக்காக 27.9 கிலோ மீட்டருக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1,836 கோடியும், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.16 கோடியும், பணி வரைபடம் உள்ளிட்ட பொதுச் செலவுக்கு ரூ.13.40 கோடியும், நிலமற்ற பொருள்கள் வாங்குவதற்கு ரூ.8.44 கோடியும் என மொத்தம் ரூ.2,126 கோடிக்கு தமிழக அரசு தற்போது நிா்வாக அனுமதி அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க