செய்திகள் :

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

post image

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தக் கண்காட்சி தொடா்ந்து அக்டோபா் 4 ஆம் தேதி வரை (ஞாயிறு உள்பட) நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இதில், களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூா்த்திகள், அஷ்டதிக் பாலகா்கள், அஷ்ட பைரவா்கள், நவ கிரகங்கள், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகா் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியா் செட், தா்பாா் செட், மைசூா் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூா்த்திகள் செட், கருட சேவை செட், வைகுந்தம் செட், துா்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுா்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணா் விளையாட்டு செட் போன்ற செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், ராஜஸ்தான், கொல்கத்தா, புணே, புதுதில்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கொல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் டி. சக்தி தேவி.

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க