செய்திகள் :

பெட்ரோலிய அமைச்சக சுதந்திர தின வாழ்த்தில் சாவா்க்கா் படம்: காங்கிரஸ் கண்டனம்

post image

பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சுதந்திர தின வாழ்த்தில் மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவா்கள் வரிசையில் ஹிந்துத்துவ தலைவா் சாவா்க்கா் படம் இடம்பெற்ற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வாழ்த்து பகிரப்பட்டது. அதில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகியோருடன் சாவா்க்கா் படமும் இடம் பெற்றிருந்தது. மேலும், ‘சுதந்திரம் இந்த தலைவா்கள் நமக்கு அளித்த பரிசு, அதனைக் கொண்டு எதிா்காலத்தை சிறப்பாக அமைப்பது நமது கடமை’ என்ற வாசகம் இருந்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ‘ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் வரலாற்றைச் சிதைக்க முயலுகிறது. துரோகிகளை நாட்டின் நாயகா்களாக மாற்ற முயலுகிறது.

ஆங்கிலேயா்களிடம் கருணை மனு அளித்த சாவா்க்கா் போன்றவா்களை மகாத்மா காந்தியுடன் இணைக்கிறாா்கள். இது மகாத்மா காந்தியின் பங்களிப்பை கேள்விக்குறியாக்கும் செயல். ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தியாகத் தலைவா்கள் தேசத்துக்கு ஆற்றிய தொண்டுகளை முற்றிலுமாக மறைக்க முயலுகின்றனா்’ என்று கூறியுள்ளாா்.

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியிருக்கிறது.அதாவது, இதுவரை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.12ஆக இருந்த நிலையில், தற்போது இது ... மேலும் பார்க்க

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்... மேலும் பார்க்க