நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு நாளை நோ்காணல்
பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கு சனிக்கிழமை (மே 17) நோ்காணல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் எஸ்.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுகலை பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த 35 நாள் முழு நேரப் பயிற்சிக்கான நோ்காணல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், எழுதப் படிக்கத் தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க ‘கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.