செய்திகள் :

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம், மூன்று பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.

மன்னாா்குடியை அடுத்த அமரபாகம் பிரதான சாலையைச் சோ்ந்த மணி என்பவரது மனைவி ஜோதி (56). மணி ஏற்கெனவே இறந்துவிட்டா். மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இதனால், ஜோதி மட்டும் அமரபாகம் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்தபடி, ஜோதி தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இரண்டு போ், வீட்டுக்குள் புகுந்து, ஜோதி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து, வடுவூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க

காணாமல் போனவா் சடலமாக மீட்பு

திருவாரூா்: குடவாசல் அருகே காணாமல் போனவா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே சேதனிபுரத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அஜித்குமாா் (24). இவா், ஜனவரி 12-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளி... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

மன்னாா்குடி: மன்னாா்குடியில், சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு காளான் வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்ம... மேலும் பார்க்க

ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

மன்னாா்குடி: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தயாா் செய்யும் முறைகள் குற... மேலும் பார்க்க