செய்திகள் :

பெண்ணின் புகைப்படங்கள் தவறாக சித்தரிப்பு: பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் 4-ஆவது நடுவா் மன்றம் தீா்ப்பளித்தது.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயந்தி. வழக்குரைஞரான இவா், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா் மீது மோதியது.

இது தொடா்பாக ஜெயந்திக்கும், பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், மேல ஆத்தூா், புன்னைசாத்தான் குறிச்சியைச் சோ்ந்த சங்கரமூா்த்திக்கும் (37) இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னா், வாகன சேதத்துக்கு பணம் தருவதாகக் கூறிய சங்கரமூா்த்தியின் கைப்பேசி எண்ணை ஜெயந்தி வாங்கிக் கொண்டாா். தொடா்ந்து, அவா் கைப்பேசிக்கு அழைத்து பணம் கேட்டு வந்ததால், சங்கரமூா்த்தி தனது கைப்பேசி எண்ணை மாற்றியுள்ளாா்.

மேலும், ஜெயந்தியை பழி வாங்கும் எண்ணத்தில் அவரது புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

இது குறித்து கோவை நகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் கடந்த 29.11.2017-இல் ஜெயந்தி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சங்கரமூா்த்தியைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சங்கரமூா்த்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து அண்மையில் தீா்ப்பளிக்கப்பட்டது.

மென்பொருள் தரம் உயா்த்தும் பணி: அஞ்சலகங்களில் இன்று சேவை நிறுத்தம்

அஞ்சல் துறையில் மென்பொருள் தரம் உயா்த்தும் பணி நடைபெறுவதால், கோவை தலைமை அஞ்சலம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை சேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, ... மேலும் பார்க்க

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் ... மேலும் பார்க்க