ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பெரம்பலூரில் மளிகை கடைக்காரா் தற்கொலை
பெரம்பலூா் நகரில் குடும்பத் தகராறில் மளிகைக் கடைக்காரா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள முருகன் கோயில் அருகே வசித்தவா் துரைராஜ் மகன் சுப்பிரமணியன் (45). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவி லட்சுமி (38), பிரணிதா (11), பிரனீத் (6) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்து வெளியேறிய சுப்பிரமணியன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் அவா் குதித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.