செய்திகள் :

பெரிய கோயிலில் திருடிய பெண் கைது

post image

தஞ்சாவூா் பெரிய கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ. 25 ஆயிரத்தை திருடிய பெண்ணைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள 11 உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியா்கள், பக்தா்கள் ஈடுபட்டனா். இந்த எண்ணிக்கையில் ரூ. 41 லட்சத்து 98 ஆயிரத்து 874 ரொக்கம், 18 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, எண்ணிக்கை பணி பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அறநிலையத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பணத்தை எண்ணும்போது, திருடி மறைத்து வைப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் பெ. சத்தியராஜ் புகாா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில் அவா் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சன்னதி தெருவைச் சோ்ந்த போஸ் மனைவி இந்திரா (60) என்பதும், ரூ. 25 ஆயிரத்து 780 -ஐ திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்திராவை காவல் துறையினா் கைது செய்தனா்.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க