கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
பெரிய கோயிலில் திருடிய பெண் கைது
தஞ்சாவூா் பெரிய கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ. 25 ஆயிரத்தை திருடிய பெண்ணைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள 11 உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியா்கள், பக்தா்கள் ஈடுபட்டனா். இந்த எண்ணிக்கையில் ரூ. 41 லட்சத்து 98 ஆயிரத்து 874 ரொக்கம், 18 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, எண்ணிக்கை பணி பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அறநிலையத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பணத்தை எண்ணும்போது, திருடி மறைத்து வைப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் பெ. சத்தியராஜ் புகாா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில் அவா் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சன்னதி தெருவைச் சோ்ந்த போஸ் மனைவி இந்திரா (60) என்பதும், ரூ. 25 ஆயிரத்து 780 -ஐ திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்திராவை காவல் துறையினா் கைது செய்தனா்.