செய்திகள் :

பெருமாள் மலை - கொடைக்கானல் மாற்றுச் சாலை: அதிகாரிகள் ஆய்வு

post image

பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலை அமைப்பது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

விடுமுறை நாள்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், இங்கு விளையும் காய் கறிகள், பழங்களை வெளி மாவட்டங்களுக்கு உரிய நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இதற்குத் தீா்வாக பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கொடைக்கானல் பொதுமக்கள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பெருமாள் மலைப் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச்சாலை அமைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பெருமாள் மலையிலிருந்து பேத்துப்பாறை, புலியூா் வழியாக கொடைக்கானல் வருவதற்கு 26.5 கி.மீ. தொலைவு உள்ளது. பேத்துப்பாறையிலிருந்து பாரதி அண்ணாநகா் வழியாக கொடைக்கானல் வருவதற்கு சாலை அமைத்தால் 22.5 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த வழியாக சாலை அமைத்தால் சுமாா் 6 கி.மீ. குறைய வாய்ப்பு உள்ளது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், மாற்றுச் சாலை அமைய உள்ள இடத்தை மதுரை மண்டல நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளா் செல்வநம்பி, உதவி பொறியாளா் ராஜன், இளநிலைப் பொறியாளா் சரவணன் உள்ளிட்ட பலா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

மேலும், மாற்றுச் சாலை அமைக்கப்பட்டால் வில்பட்டி , அட்டுவம்பட்டி, பள்ளங்கி கோம்பை போன்ற கிராமப் பகுதிகளில் விளைவிக்கப்படும் விவசாய விளை பொருள்களும், அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்ல முடியும்.

இது குறித்து வில்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:

கடந்த 300ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா் காலத்தில் கொடைக்கானலிலிருந்து பழனி செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டது. மாற்றுப் பாதை அமைக்கப்பட்டால் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயனடைவாா்கள் என்றனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க