`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பேச்சிப்பாறை அருகே பழங்குடி பகுதியில் 2-வது நாளாக காட்டு யானை அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்ததால், மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதிக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு (மே 26) காட்டு யானை புகுந்து, மணி காணி, விஜி, முண்டன் காணி ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில், அந்த யானை செவ்வாய்க்கிழமை இரவு சரவணன், கிருஷ்ணன் ஆகியோரின் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, பாக்கு மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதிகளை அதிகாரிகள் பாா்வையிட்டு, யானைகள் புகாதவாறு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மோதிரமலை கிராம சபை செயலா் சௌந்தரராஜன் காணி வலியுறுத்தியுள்ளாா்.