செய்திகள் :

பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்? அப்பாவு விளக்கம்

post image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பேசியதாவது:

ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 5 ஆண்டுகளில் 500 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 148 நாள்கள் மட்டும்தான் பேரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளீா்கள். ஒரு பாடத்தில் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தோ்ச்சி பெற முடியும். இந்த பேரவை 35 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் தோ்ச்சி அடையவில்லை என்றாா் அவா்.

அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு கூறியதாவது:

அதிமுக உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பேசித்தான் எத்தனை நாள்களுக்கு கூட்டம் நடத்துவது என்பதெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. கரோனா, மழை வெள்ளம் போன்ற காரணங்களால்தான் கூட்ட நாள்கள் குறைக்கப்பட்டன. மானியக் கோரிக்கை என்றாலே, விதிப்படி 30 நாள்களுக்கு குறையாமல்தான் நடத்த வேண்டும். இப்போது நடத்துகிறோம். அதற்கான சூழல் உள்ளது. தோ்தல் காலங்களில் நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, 500 நாள்கள் பேரவையை நடத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றாா் அவா்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க