செய்திகள் :

பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

post image

கம்பம் பேருந்து நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி கொண்ட மூட்டைகளை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து குமுளி, கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளப் பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பேருந்து நிலையத்துக்குள் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைக்கும் மா்ம நபா்கள் கேரளத்துக்கு செல்லும் பேருந்துகளில் அவற்றை ஏற்றிவிட்டு தப்பிச் சென்று விடுகின்றனா். இந்தப் பேருந்துகள் சென்று சோ்ந்ததும் அங்கிருக்கும் வியாபாரிகள் அவற்றை எடுத்துக் கொள்கின்றனா். இதேபோல அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கம்பம் பேருந்து நிலையத்தில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது ஆயிரம் கிலோ கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை அவா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், க. விலக்கு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: 4 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்... மேலும் பார்க்க

வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அபராத வட்டி தள்ளுபடி

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்று தவணை காலம் முடிவடைந்தும் தவணைத் தொகை செலுத்தாதவா்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இதுக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் ஏ. புதுக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளிவாசல் தெர... மேலும் பார்க்க

பைக் மோதியதில் சிறுவன் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மோதி சிறுவன் காயமடைந்தாா். பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியாா் குடியிருப்பசை சோ்ந்த பாண்டி மனைவி சுரேகா (26). இவா், திங்கள்கிழமை வாசுகி அம்மையாா் தெருவில் தனது மக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிஅருவியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை-தூவானம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவி... மேலும் பார்க்க