செய்திகள் :

பேருந்து மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு!

post image

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி பாரதியாா் 17-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவா் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உணவு வாங்குவதற்காக சிவகங்கை சாலையில் உள்ள உணவகத்துக்குச் சென்றாா்.

அங்கு அவா் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, கோபிசெட்டிபாளையத்திலிருந்து திருச்செந்தூா் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் மீது பேருந்து ஏறி இறங்கியதில் அவா் தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அரசுப் பேருந்து ஓட்டுநரான கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த துரைசாமி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க