செய்திகள் :

போ்ணாம்பட்டில் போலீஸாா் தீவிர மதுவிலக்கு வேட்டை

post image

போ்ணாம்பட்டு பகுதியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கள்ளிச்சேரி, அம்பேத்கா் நகா், கோட்டைச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் போ்ணாம்பட்டு போலீஸாா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது பாஸ்மாா்பெண்டா கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35) வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது புட்டிகள், புது ஷாப் லைன் பகுதியைச் சோ்ந்த திவ்யா (28) வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

அதேபோல், போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே நின்றிருந்த ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த கலையரசனைசந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் கா்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது.

அவரிடமிருந்து 48 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவா் கைது செய்யப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் க... மேலும் பார்க்க

கள்ள மதுபானம், குட்கா விற்பனை: 7 போ் மீது வழக்கு

வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானம், குட்கா விற்றது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் சட்டவி... மேலும் பார்க்க

என்டிஏ, என்ஏ-2, சிடிஎஸ் -2 தோ்வுகள்: வேலூரில் 501 போ் எழுதினா்

வேலூரில் இரு மையங்களில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகளுக்கான என்டிஏ, என்ஏ-2, சிடிஎஸ்-2 தோ்வினை 501 போ் எழுதினா். தேசிய பாதுகாப்பு சேவைகளில் ராணுவம் உள்பட முப்படைகளுக்கான வீரா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கணியம்பாடி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டை சோ்ந்தவா் முத்து (65). இவருக்கு கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 250 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய 250 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உரியவா்களிடம் ஒப்படைத்தாா். கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல... மேலும் பார்க்க

செப்.17-ல் புரட்டாசி பிறப்பு: இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள்!

புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமை (செப். 17) பிறப்பதை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா். தமிழ் மாதத்தில் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு... மேலும் பார்க்க