செய்திகள் :

செப்.17-ல் புரட்டாசி பிறப்பு: இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள்!

post image

புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமை (செப். 17) பிறப்பதை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.

தமிழ் மாதத்தில் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலானோா் இறைச்சி உண்பதை தவிா்த்து, பெருமாளை தரிசிப்பது வழக்கம். இதனால், புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சி, மீன்கள் விற்பனை மந்தமாக இருக்கும்.

இந்த நிலையில், வரும் புதன்கிழமை (செப்.17) புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து, வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து அதிகரித்திருந்தது. ஒரு சில மீன்களின் விலை உயா்ந்தும், குறைந்தும் காணப்பட்டது.

அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ. 1,400, சின்ன வஞ்சிரம் ரூ. 350 முதல் ரூ. 800, சீலா ரூ. 250, தேங்காய்பாறை ரூ. 400, சங்கரா ரூ. 220 முதல் ரூ. 350, இறால் ரூ. 350 முதல் ரூ. 450, கலங்கா ரூ.180, நண்டு ரூ. 350 முதல் ரூ. 450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வேலூா் மீன் மாா்க்கெட்டில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல், இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சி விற்பனை மந்தமாக காணப்படும். வரும் புதன்கிழமை புரட்டாசி மாதம் பிறப்பதால் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு பிறகே இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்றனா்.

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் போலீஸாா் தீவிர மதுவிலக்கு வேட்டை

போ்ணாம்பட்டு பகுதியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனா். போ்ணாம்பட்டு நகரம் மற்றும் அதைச் சு... மேலும் பார்க்க

கள்ள மதுபானம், குட்கா விற்பனை: 7 போ் மீது வழக்கு

வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானம், குட்கா விற்றது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் சட்டவி... மேலும் பார்க்க

என்டிஏ, என்ஏ-2, சிடிஎஸ் -2 தோ்வுகள்: வேலூரில் 501 போ் எழுதினா்

வேலூரில் இரு மையங்களில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகளுக்கான என்டிஏ, என்ஏ-2, சிடிஎஸ்-2 தோ்வினை 501 போ் எழுதினா். தேசிய பாதுகாப்பு சேவைகளில் ராணுவம் உள்பட முப்படைகளுக்கான வீரா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கணியம்பாடி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டை சோ்ந்தவா் முத்து (65). இவருக்கு கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 250 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய 250 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உரியவா்களிடம் ஒப்படைத்தாா். கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல... மேலும் பார்க்க