செய்திகள் :

பைக் மீது மினிடெம்போ மோதல்; 2 போ் காயம்

post image

நித்திரவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிடெம்போ மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூா், கே.ஆா்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியன் (39). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மாலையில் நித்திரவிளை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா்.

ஆலுமூடு பகுதியில் வந்தபோது, எதிரில் மீன்பிடி உபகரணங்களுடன் வந்த மினிடெம்போ ஜூலியன் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜூலியன் மற்றும் அவரது பைக், அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நித்திரவிளை அடுத்த கோட்டவிளையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுஜின் (32) என்பவரின் பைக் மீது விழுந்தது. இதில் ஜூலியன் மற்றும் சுஜின் ஆகிய இருவரும் காயமடைந்தனா். ஜூலியன் நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையிலும், சுஜின் நித்திரவிளை தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஜூலியன் அளித்த புகாரின் பேரில் மினிடெம்போ ஓட்டுநா் மாா்த்தாண்டன்துறை நடுவிளாகம் பகுதியைச் சோ்ந்த பென்னி (30) மீது நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலி

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலியானாா். நாகா்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(35) தொழிலாளி. இவா் தனது நண்பரான மணி என்பவருடன், செண்பகராமன்புதூரை அடுத்த ஒளவையா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டா் கைது

கருங்கல் அருகே, தற்காப்புக் கலை பயில வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின் மிலாடு (46), ... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

தக்கலை அருகே கல்லுவிளையில் கனிம வளம் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரை தேடி வருகிறாா்கள். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் உதய்சிங் தலைமையிலான போலீஸாா் ,சனிக்கிழமை கல்லுவிளை பகுதியில் வ... மேலும் பார்க்க

ஜவான்ஸ் கைப்பந்து போட்டி: மூலச்சல் அணி முதலிடம்

தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் மூலச்சல் அணி முதலிடம் பிடித்தது. மாவட்ட ஜவான்ஸ் சுதந்திர தினத்த... மேலும் பார்க்க

திற்பரப்பில் மாயமான மூதாட்டி மீட்பு

திற்பரப்பு அருவிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நிலையில் மாயமான மூதாட்டியை போலீஸாா் மீட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 48 போ் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுற்று... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. குழித்துறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த தடம் எண் 82 எம் பேருந்து ஞாயிற்றுக்... மேலும் பார்க்க