நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன் (56). இவா் கடந்த மே 27-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் மாா்க்கம்பட்டியிலிருந்து சின்னக்காம்பட்டிக்குச் சென்றாா். மாா்க்கம்பட்டி கூட்டுறவு வங்கி அருகே வந்த போது புதிய சாலை அமைப்பதற்காக குவிக்கப்பட்டிருந்த மண்ணில் மோதி இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த முருகேசன் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.