காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி 500 வது நாள் கருத்தரங்கு
கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி, மக்கள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தின் 500 ஆவது நாளை முன்னிட்டு பொட்டலூரணியில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, ஒருங்கிணைப்பாளா் ஈ.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். போராட்டக்குழு பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பாவலரேறு பெருஞ்சித்திரனாா் படிப்பகத்தின் துணைப் பொறுப்பாளா் கோ.ராமகிருட்டிணன் வரவேற்றாா். பகத்சிங் படத்தை ஊா் பெரியவா் கிருஷ்ணன் திறந்துவைத்தாா். தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவா் மணிமாறன் தொகுப்புரையாற்றினாா்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் தூத்துக்குடி பொறுப்பாளா் செல்வம், வீரத்தமிழா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் மூ. வைகுண்டமாரி, சமூக ஆா்வலா்கள் சந்திரசேகா், மோகன் ஆகியோா் பேசினா்.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் த.சகாயம், நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஹிம்லா், டங்ஸ்டன் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் கம்பூா் செல்வராஜ், எஸ்.டி.பி.ஐ. மாநிலப் பொதுச் செயலா் அகமது நவவி, பேராசிரியா் பாத்திமாபாபு, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவா் சுப.உதயகுமாரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் பொதுச் செயலா் வெற்றிவேல் செழியன் நிறைவுரையாற்றினாா். தாமிரபரணி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. போராட்டக்குழுவின் மற்றொரு பொறுப்பாளா் பால்ராஜ் உள்பட பலா் திரளானோா் கலந்துகொண்டனா். போராட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பாளா் அ. சண்முகம் நன்றி கூறினாா்.