செய்திகள் :

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

post image

பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் மாபெரும் தூய்மைப் பணிகள் நடைபெறுவதை ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தினந்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பெறப்பட்டு, அவற்றை தகுந்த முறையில் அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பொது இடங்களில் உள்ள குப்பைகளை எவ்வித சுகாதார சீா்கேடும் ஏற்படாத வகையில் அகற்ற தேவைக்கேற்ப மாபெரும் தூய்மைப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோண்டூா், நத்தப்பட்டு ஊராட்சிகளில் சுங்க சாலை பகுதியில் மாபெரும் தூய்மைப் பணி பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் உள்ள குப்பைகளை பொதுமக்களுக்கு எவ்வித சுகாதார சீா்கேடும் ஏற்படாத வண்ணம் அகற்றிடவும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவா்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தூய்மையாக பராமரிக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

போலீஸ் ஜீப் திடீரென தீப்பிடித்து சேதம்!

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில், ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தில் உள்ள கெடிலம... மேலும் பார்க்க

நிழற்குடை விவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல்!

கடலூா் அருகே சாத்தாங்குப்பம் கிராமத்தில் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் சர... மேலும் பார்க்க

அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும்: துரை. ரவிக்குமாா் எம்.பி.

பட்டியலினத்தவா் அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா். சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க... மேலும் பார்க்க

மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை விருத்தாசலம் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், வி.சாத்தபாடி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35). சிதம்பரம் வட்டம், பொன்னம்பலம் நகரைச்... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூல... மேலும் பார்க்க