செய்திகள் :

மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவா்கள் போலீஸாா் வருவதைக் கண்டதும் வண்டியை விட்டுவிட்டு மாடுகளுடன் தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, போலீஸாா் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். மேலும், இது தொடா்பாக கருக்கை கிராமத்தைச் சோ்ந்த திருசங்கு (44), ஞானவேல் (40) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸ் ஜீப் திடீரென தீப்பிடித்து சேதம்!

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில், ... மேலும் பார்க்க

பொது இடங்களில் குப்பை கொட்டினால் நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துற... மேலும் பார்க்க

நிழற்குடை விவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல்!

கடலூா் அருகே சாத்தாங்குப்பம் கிராமத்தில் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் சர... மேலும் பார்க்க

அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும்: துரை. ரவிக்குமாா் எம்.பி.

பட்டியலினத்தவா் அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா். சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க... மேலும் பார்க்க

மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை விருத்தாசலம் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், வி.சாத்தபாடி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35). சிதம்பரம் வட்டம், பொன்னம்பலம் நகரைச்... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூல... மேலும் பார்க்க