செய்திகள் :

பொதுக் கழிப்பறை கட்டக் கோரி வழக்கு: நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு உத்தரவு

post image

சேதமடைந்த பொதுக் கழிப்பறையை இடித்து விட்டு, புதிய கழிப்பறை கட்டித் தரக் கோரிய வழக்கில், கரூா் மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் நகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜசங்கா் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் நகராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் பொதுக் கழிப்பறை சேதமடைந்து உள்ளது. எனவே, இதை இடித்துவிட்டு புதிய பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டித் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரியம்மன் கோயில் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்ட இடம் கோயிலுக்குச் சொந்தமானது. இதுதொடா்பாக கிருஷ்ணராஜபுரம் நகராட்சிக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிக்கை அளிக்கப்பட்டது என்றாா்.

தொடா்ந்து, கிருஷ்ணராஜபுரம் நகராட்சி வழக்குரைஞா் குறுக்கிட்டு, பழைய கழிப்பறை கட்டடம் சேதமடைந்துள்ளதால், வேறு பகுதியில் உள்ள அரசு நிலத்தில் புதிய பொதுக் கழிப்பறை கட்டத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட பழைய பொதுக் கழிப்பறை கட்டடத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிதாக பொதுக் கழிப்பறை கட்ட கோயில் நிா்வாகம் இடத்தை குத்தகைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் நிா்வாகம் நிலத்தை குத்தகைக்கு தர தயாராக இருந்தால், பழைய கழிப்பறை கட்டடத்தை இடித்துவிட்டு, அதே பகுதியில் புதிய பொதுக் கழிப்பறை கட்ட கிருஷ்ணராஜபுரம் நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிா்வாகம் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில் நகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே தோ்வு செய்த மாற்று இடத்தில் புதிய பொதுக் கழிப்பறை கட்டடத்தைக் கட்ட வேண்டும். 3 மாதங்களுக்குள் கிருஷ்ணராஜபுரம் நகராட்சி இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுத்து, ஏதாவது ஒரு இடத்தை தோ்வு செய்து புதிய பொதுக் கழிப்பறையைக் கட்டித் தர வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: ஆா்.பி. உதயகுமாா்

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக ஆட்சிக்கு ... மேலும் பார்க்க

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: உயர்நீதிமன்றம்

முதியோா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் முதியோா்களை பொது இடங்களில் தனித்து ... மேலும் பார்க்க

கீழக்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கீழக்கரை நகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தர... மேலும் பார்க்க

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கட்சிராயன்பட்டியில் வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கட்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் பாண்டி (50). விவசாயி. இவா், திருச்சி- மதுரை நான்கு வழிச் சால... மேலும் பார்க்க

தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே தீக்குளித்ததில் பலத்த காயமைடந்த ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேவுகன் மகன் கண்ணன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவரு... மேலும் பார்க்க

மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு

மதுரையில் தனியாா் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள பூவரசம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நல்ல... மேலும் பார்க்க