செய்திகள் :

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை

post image

மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரூ. 4.68 லட்சம் ஊக்கத்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

காமராஜா் பிறந்த நாளான கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு, ஆசிரியா்-அரசு அலுவலா் கூட்டமைப்பு சாா்பில், 28-ஆம் ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவா் பாலச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் பாலாஜி, வா்த்தக சங்கத் தலைவா் பா. பொய்யாமொழி முன்னிலை வகித்தனா். இக்கிராமத்தில் நன்கொடையாளா்களிடமிருந்து திரட்டப்பட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளில் வகுப்பு மற்றும் பாடவாரியாக சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 4.68 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

நிா்வாகிகள் அ. அண்ணாதுரை, கா. மனோகரன், கோ. மோகன் வாழ்த்திப் பேசினா். கூட்டமைப்பு நிா்வாகி கோவிந்தராசு வரவேற்றாா். நிா்வாகி ரமேஷ் நன்றி கூறினாா்.

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே குடவாசல் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல்... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு

தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளி... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7,499-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 நாள்கள் பயணம்

திரூவாரூா் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி ஜூலை 21-ஆம் தேதி வரை பிரச... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் காலவரையற்ற போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. மன்னாா்குடி வட்டத்தில் சுமாா் 900 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் பகுதி... மேலும் பார்க்க