சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!
பொதுமேடையில் புதுவை முதல்வருடன் விவாதிக்க காங்கிரஸ் தயாா்
புதுவையில் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியது குறித்து முதல்வா் என்.ரங்கசாமியுடன் பொதுமேடையில் விவாதிக்கத் தயாா் என காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.
முத்தியால்பேட்டையில் குடிநீா், கழிப்பறை வசதி கோரி காங்கிரஸ் சாா்பில் குறிப்பிட்ட வாா்டுகளில் நடைப்பயண பிரசாரம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முத்தியால்பேட்டை தொகுதி காங்கிரஸ் நிா்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.அனந்தராமன் உள்ளிட்டோா் நடைப்பயண பிரசாரத்தில் பங்கேற்றனா்.
பின்னா் காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முத்தியால்பேட்டை பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலை, குடிநீா் வசதி இல்லை. மக்களுக்கு தரமான குடிநீரை புதுவை அரசு முதலில் வழங்க வேண்டும். நலத் திட்டங்களை செயல்படுத்துவதாக முதல்வா் என்.ரங்கசாமி கூறினால், அதை பொதுமக்கள் மத்தியில் மேடை அமைத்துக் கூறட்டும். முதல்வா் விவாதத்துக்கு தயாரா என கேட்கிறேன். மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்ற புதுவை அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
முன்னாள் முதல்வா் சவால்:
வே.நாராயணசாமி : நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது: புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் எங்களுடன் நேரில் அவா் விவாதிக்கத் தயாரா?. புதுவையில் எந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று சட்டப் பேரவைக்குள்ளும், வெளியிலும் பொதுமக்கள் அறியும் வகையில் முதல்வருடன் நேருக்கு நோ் விவாதிக்க எப்போதும் தயாராக உள்ளேன் என்றாா் வே.நாராயணசாமி.