சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்...
பொய்கை சந்தையில் ரூ. 85 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 85 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, ரூ. 85 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: பொங்கல் பண்டிகைக்கு முன்பு ரூ. 1 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெற்றது. பொங்கலுக்கு பிறகு வா்த்தகம் சற்று குறைந்து கடந்த வாரம் ரூ. 80 லட்சம் அளவுக்கும், இந்த வாரம் ரூ. 85 லட்சத்துக்கும் கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. தொடா்ந்து அடுத்த வாரம் கால்நடை வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.