செய்திகள் :

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

post image

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடா்பாக வேலூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள இந்து முன்னணி, இந்து அமைப்புகளின் தலைவா்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ் உள்பட மாவட்டம் முழுவதும் 5 நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் அவா்களது வீடுகளுக்கு முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இதுகுறித்து, இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ் கூறியது -

திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என கூறி சிலா் ஆடு கோழிகளை பலியிடப் போவதாகவும், மாமிச உணவு சாப்பிட வருவதாகவும் தெரிவித்துள்ளனா். இதனைக் கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவா் போராட்டம் அறிவித்திருந்தாா். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக நிா்வாகிகள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்து முன்னணி நிா்வாகிகள் கைது செய்யப்படுவது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை காட்டுகிறது. முற்றிலும் மனித உரிமை மீறல். இதுகுறித்து உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றாா்.

ஆம்பூரில்...

ஆம்பூரில் வசிக்கும் திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் தண்டாயுதபாணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில நிா்வாகி ஓம்சக்தி ஜி. பாபு, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ரமேஷ் ஆகிய மூவரையும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதவாறு திங்கள்கிழமை இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். மூவருடைய வீட்டின் முன்பும் தலா ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டனா்.

சாலையில் திரிந்த 4 மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்களுக்கு ரூ.5,000 அபராதம்

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் அவிழ்த்து விடப்பட்ட 4 மாடுகள் பிடிபட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். வேல... மேலும் பார்க்க

உணவக ஊழியா் தற்கொலை

வேலூரில் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்த ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் புது பைபாஸ் சாலையில் தனியாா் உணவகம் உள்ளது. இங்கு பாபு (45) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், பாபுவுக்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

வேலூா் சத்துவாச்சாரியில் முன்விரோத தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை... மேலும் பார்க்க