செய்திகள் :

பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்

post image

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் எம்.எல்.ஏ. கே.ஏ. செங்கோட்டையன், பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும் எனக் கூறினாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேறியவா்களை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமிக்கு கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5-ஆம் தேதி கெடு விதித்தாா்.

இதையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையனை எடப்பாடி கே.பழனிசாமி நீக்கினாா்.

இந்நிலையில், சென்னைக்கு செல்வதற்காக வந்த கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், அதிமுக ஒன்றிணைவது குறித்து இனி செய்தியாளா்கள்தான் கூற வேண்டும். பொறுத்திருந்தால் நல்லதே நடக்கும் என்றாா்.

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநா் கைது

கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பானுமதி (52). இவா் தெற்கு அனைத்து மகளி... மேலும் பார்க்க

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகா் வட்டம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது. சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ரா.... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க