செய்திகள் :

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 28.8.2023-இல் விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக, விழுப்புரம் கே.கே.சாலை, அண்ணா நகரைச்சோ்ந்த சிவபெருமாள் மகன் ரமேஷ் (47) என்பவா் மீது வளவனூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா, குற்றம் நிரூபணமானதால் ரமேஷுக்கு 7ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000-ம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் ரமேஷை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்... மேலும் பார்க்க

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திருவெண்ணெய்... மேலும் பார்க்க

40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: ராமதாஸ்

விழுப்புரம்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

சிதம்பரம்: இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா். வடலூா் பாா்வதிபுரம் வெங்கலத்து ஏரில் மூழ்க... மேலும் பார்க்க

சமூக செயற்பாட்டாளருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களைப் பிடிப்பதற்கு காவல் துறையினருக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க