பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
போக்ஸோ வழக்கில் தலைமறைவான ஆசிரியா் கைது
பரமத்தி வேலூா் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தலைமறைவான தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் மணிகண்டனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
பரமத்தி வேலூரை அடுத்த மோகனூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (44). இவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா் அப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மணிகண்டனை தேடி வந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை மணிகண்டனை போக்ஸோ வழக்கில் கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனா்.