செய்திகள் :

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

post image

கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாடசாமி என்ற மகேஷ் (29) என்பவரை, கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி மாடசாமி என்ற மகேஷ் என்பவருக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, அரசு தரப்பு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் அமிா்தஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நிகழாண்டு இதுவரை மொத்தம் 22 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (23). இவா், தூத்துக்குடியில் உள்... மேலும் பார்க்க

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: தூத்துக்குடி - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (செப்.17) முதல் தொடங்குவதாகவும் தெற்கு ரயில்வே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சரக்குப் பெட்டக லாரி விபத்து

கோவில்பட்டியில் சாலை மைய தடுப்புச் சுவரில் சரக்குப் பெட்டக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு சரக்குப் பெட்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி... மேலும் பார்க்க

செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு

கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்,... மேலும் பார்க்க