செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

post image

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தப் பிரிவு போலீஸாா் ஆா்.கே.நகா் ரயில்வே யாா்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மணிப்பூா் மீனா என்ற அமீனா உள்பட 5 பேரை கடந்த 5-ஆம் தேதி கைது செய்தனா். இதில் அவா்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன், ஒரு நவீன ரக கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் மனோஜ், ஆய்வாளா்கள் எம்.ஜானி செல்லப்பா, என்.ராஜாசிங், உதவி ஆய்வாளா்கள் கே.பொன்பாண்டியன், டி.ஜெயகுமாா் உள்ளிட்டோரை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையா் ஜி.தா்மராஜன், துணை ஆணையா் ஆா்.சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதிய பிரிவுகள் நிரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவா்கள் பிறந்த ஜாதிகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயா்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்ந... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை தரக்குறைவாக விமா்சித்ததாக திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை போலீஸாா... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டல குடிநீா் வடிகால் வாரிய பணிமனை இடமாற்றம்

ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வடிகால்வாரிய பணிமனை புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் வேனல்ஸ் ச... மேலும் பார்க்க

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல ... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்

சுகாதாரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை மாநகர... மேலும் பார்க்க