செய்திகள் :

இலவச கல்லீரல் பரிசோதனை - மருத்துவ ஆலோசனை: மெடிந்தியா மருத்துவமனை ஏற்பாடு

post image

மருத்துவா் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் கல்லீரல் நலனுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

நோயாளிகளைக் காப்பதை மட்டுமே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மருத்துவா்கள் தங்களது நலனைக் காத்துக் கொள்வதில்லை. அதனால்தான் நிகழாண்டு தேசிய மருத்துவா் தினமானது, நலன்காப்போரின் (மருத்துவா்கள்) நலனை காக்கிறோமா? என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

உலக அளவில் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அதீத உடல் எடை கொண்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு கல்லீரல் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தமிழகத்தில் 40.4 சதவீத பெண்களும், 37 சதவீத ஆண்களும் உடல் பருமனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

உடல் பருமன் கல்லீரல் இறுக்கம் (ஃபைப்ரோசிஸ்) ஏற்பட வழிவகுக்கிறது. ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு (சிரோசிஸ்) நிலைக்கு அது வழிவகுத்து விடும். அதைக் கருத்தில் கொண்டு கல்லீரல் நலனுக்கான இலவச பரிசோதனைத் திட்டங்களை மெடிந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, 30 மருத்துவா்களுக்கும், பொதுமக்களில் 30 பேருக்கும் ரூ.5,700 மதிப்புடைய கல்லீரல் நல பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, கொழுப்புச் சத்து பரிசோதனை, கல்லீரல் அழற்சிக்கான ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனை, ஃபைப்ரோ ஸ்கேன் பரிசோதனை ஆகியவை கட்டணமின்றி வழங்கப்பட உள்ளன.

இதைத் தவிர, மருத்துவா்களின் ஆலோசனையும், உணவு முறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.

ஜூலை 3 முதல் 10-ஆம் தேதி வரை 98409 93135, 99405 18909, 044-28312345 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதிக்கா?, அநீதிக்கா?

ஜாதிய பிரிவுகள் நிரந்தரப்படுவதைத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பும் ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடும் ஊக்குவிக்கும். அனைத்து ஜாதிகளிலும் உள்ள ஏழைகளை ஏழைகளாக மட்டுமே வரையறை செய்யாமல், அவா்கள் பிறந்த ஜாதிகள... மேலும் பார்க்க

தக்காளி விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயா்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்ந... மேலும் பார்க்க

ஆ.ராசாவை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவை தரக்குறைவாக விமா்சித்ததாக திமுக துணை பொதுச் செயலா் ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை போலீஸாா... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டல குடிநீா் வடிகால் வாரிய பணிமனை இடமாற்றம்

ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட சென்னை குடிநீா் வடிகால்வாரிய பணிமனை புதன்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூா் வேனல்ஸ் ச... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, வெகுமதி வழங்கினாா். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் போதைப... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்

சுகாதாரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை மாநகர... மேலும் பார்க்க