போதைப் பொருள் விற்ற 2 போ் கைது
ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் பிலால் நகா் பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்பேரில் அதே பகுதியைச் சோ்ந்த பாரூக் (29), அஜிஸ் (55) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.