செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது

post image

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து, காவல்துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் பிரதானச் சாலையில் ஆறுமகம் மகன் கணேசன் (67) என்பவா் தனது பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கணேசனைக் கைது செய்த அரும்பாவூா் போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ் உள்ளிட்ட 2 கிலோ போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கணேசன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

நின்றிருந்த லாரி மீது காா் மோதி 5 போ் பலத்த காயம்

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (52). இவா், தனது மனைவி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வீடு புகுந்து 3.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து மா்ம நபா்கள் 3.5 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூா் சமத்துவபுரத்தில... மேலும் பார்க்க

பாளையத்தில் மின் மோட்டா்களின் வயா்கள் திருட்டு

பெரம்பலூா் அருகே 15-க்கும் மேற்பட்ட மின் மோட்டாா்களின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா். குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை தங்களது வயல்களுக்... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் பெரம்பலூரில் 15,818 மூத்த குடிமக்கள் பயன்

‘தாயுமானவா்’ திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 15,818 போ் பயனடைந்து வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட... மேலும் பார்க்க

ஆயுத பூஜை பொருள்கள் விலை கடும் உயா்வு!

பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கான பூஜைப் பொருள்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஆயுதபூஜையையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை முழுவீச்ச... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய இருவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள்களில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக... மேலும் பார்க்க