செய்திகள் :

போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்த இருவா் கைது

post image

அரவக்குறிச்சி: போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்து வழங்குவதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மே 8 ஆம் தேதி தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் காா்த்திக், ஜெயக்குமாா், சம்பத்குமாா், நவீன், சீனிவாசன், கலைவாணி ஜெனிஃபா் ஆகிய 6 பேரையும் பிடித்து கரூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் போலியாக ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரிக்க உடந்தையாக செயல்பட்ட திருப்பூரில் வசித்து வரும் நேபாளத்தை சோ்ந்த ராம் பகதூா் (35) மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த மிதுன் ஷேக் (29) ஆகிய இருவரையும் கரூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க