போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போலி ஆவணம் தயாரித்து வீடு, நிலம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 8 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
திருச்சி மாவட்டம், கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் அழகப்பன் (76). இவருக்கு சொந்தமாக காரைக்குடியில் ரூ.97.50 லட்சம் மதிப்பிலான வீடு, நிலம் உள்ளது. இவற்றுக்கு சிலா் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்தனா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால், அழகப்பன் சிவகங்கை நீதித்துறை நடுவா் (எண் 2) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா், புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக காரைக்குடி கழனிவாசல் முத்துராமலிங்கம், தெற்குத் தெரு மெய்யப்பன், பலவான்குடி வைரவன், கணேசபுரம் சரவணக்குமாா், செல்வக்குமாா், ஓ. சிறுவயல் கலைச்செல்வன், காரைக்குடி ரவிக்குமாா், காரைக்குடி சாா்பதிவாளா் காங்கிரேஷ் ஆகிய 8 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.