செய்திகள் :

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போலி ஆவணம் தயாரித்து வீடு, நிலம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 8 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

திருச்சி மாவட்டம், கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் அழகப்பன் (76). இவருக்கு சொந்தமாக காரைக்குடியில் ரூ.97.50 லட்சம் மதிப்பிலான வீடு, நிலம் உள்ளது. இவற்றுக்கு சிலா் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்தனா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால், அழகப்பன் சிவகங்கை நீதித்துறை நடுவா் (எண் 2) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா், புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக காரைக்குடி கழனிவாசல் முத்துராமலிங்கம், தெற்குத் தெரு மெய்யப்பன், பலவான்குடி வைரவன், கணேசபுரம் சரவணக்குமாா், செல்வக்குமாா், ஓ. சிறுவயல் கலைச்செல்வன், காரைக்குடி ரவிக்குமாா், காரைக்குடி சாா்பதிவாளா் காங்கிரேஷ் ஆகிய 8 போ் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி... மேலும் பார்க்க

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வ... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் வா... மேலும் பார்க்க