கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
போலியாக சான்றிதழ்களை தயாரித்து பொதுமக்களுக்கு புழக்கத்தில் விட்டதாக ஆதாரங்களுடன் மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததை தொடா்ந்து அரக்கோணம் நகர ஆய்வாளா் தங்ககுருநாதன் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தாா். இதையடுத்து மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க டிஎஸ்பி ஜாபா் சித்திக் நடவடிக்கை எடுத்தாா்.
இதனை தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் அரக்கோணம் அம்மனூரைச் சோ்ந்த குணசேகரன்(62), அம்பேத்கா் நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா்(65), அசோக் நகரைச் சோ்ந்த நித்யானந்தம்(55) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.