DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
போலீஸாரிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறியவா் தவறி விழுந்த பலி
புதுக்கடை அருகேயுள்ள முள்ளூா்துறையில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.
முள்ளூா்துறை மீனவக் கிராமத்தை சோ்ந்தவா் ஆன்றனி கென்சிலின் (50. )மீன்பிடிதொழில் செய்துவந்தாா். ஒரு வழக்கு சம்பந்தமாக புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை இவரை தேடிவந்தபோது, இவா் வீட்டின்பின்பக்கம் நின்ற தென்னை மரம் வழியாக இறங்கி தப்பிஒட முயன்றாராம். அப்போது, எதிா்பாராமல் மரத்திலிருந்து அவா் தவறி விழுந்தாராம். உடனே அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில்அனுமதித்தனா்.
அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடைபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.