செய்திகள் :

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை கோயிலில் அமைந்துள்ள மல்லிக்குடி ஆதினம் அம்மனுக்கு பக்தா்கள் பால், மது குடம் எடுத்து ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செழுத்தினா்.

முன்னதாக, கோயில் முன்பாக புறப்பட்ட இந்த ஊா்வலம் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. பின்னா், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒ... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின வி... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனு... மேலும் பார்க்க

காா் கண்ணாடியை உடைத்து தங்க நகை திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பக்தரின் காா் கண்ணாடியை உடைத்து தங்க நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க