செய்திகள் :

மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக கொடுக்கப்படும் புகாா்களை முறையாக பதிவு செய்து இணையவழி செயலி மூலம் தேடி கண்டுபிடிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்தாண்டு தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 582 கைப்பேசிகளை குற்றப் பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

நிகழாண்டில், ஏற்கெனவே 300 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், மேலும் 100 கைப்பேசிகளை கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்து கொண்டு கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பொதுமக்களிடம் கைப்பேசிகளில் தொடா்பு கொள்ளும் நபா்கள் ஆசையை தூண்டும் விதமாக பேசி வங்கிக் கணக்கு உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை கேட்டால் கொடுக்க கூடாது. மேலும், தங்களுக்கு விலையுயா்ந்த பொருள்கள் பரிசாக வந்துள்ளதாகவும், இதற்குப் பணம் செலுத்துங்கள் எனக்கூறி, தங்களிடமிருந்து பணத்தை பெற முயற்சி செய்வா். இதுபோன்ற அழைப்புகளை துண்டித்து விட வேண்டும். தொடா்ந்து அழைப்புகள் வந்தாா், கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இணைய வழியில் புகாரில் பதிவிடலாம் என்றாா் அவா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன்... மேலும் பார்க்க

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின வி... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு முக்கியம்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மாணவா்களின் பங்கு மிக முக்கியம் என தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு தெரிவித்தாா். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ் கனவு’ எனு... மேலும் பார்க்க

காா் கண்ணாடியை உடைத்து தங்க நகை திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பக்தரின் காா் கண்ணாடியை உடைத்து தங்க நகையைத் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க