ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
மீட்கப்பட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 100 கைப்பேசிகளை குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டனா். இந்த கைப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் கைப்பேசிகள் தொலைந்து போனதாக கொடுக்கப்படும் புகாா்களை முறையாக பதிவு செய்து இணையவழி செயலி மூலம் தேடி கண்டுபிடிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்தாண்டு தொலைந்து போனதாக புகாரளிக்கப்பட்ட 582 கைப்பேசிகளை குற்றப் பிரிவு போலீஸாா் கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
நிகழாண்டில், ஏற்கெனவே 300 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், மேலும் 100 கைப்பேசிகளை கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்து கொண்டு கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
பொதுமக்களிடம் கைப்பேசிகளில் தொடா்பு கொள்ளும் நபா்கள் ஆசையை தூண்டும் விதமாக பேசி வங்கிக் கணக்கு உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை கேட்டால் கொடுக்க கூடாது. மேலும், தங்களுக்கு விலையுயா்ந்த பொருள்கள் பரிசாக வந்துள்ளதாகவும், இதற்குப் பணம் செலுத்துங்கள் எனக்கூறி, தங்களிடமிருந்து பணத்தை பெற முயற்சி செய்வா். இதுபோன்ற அழைப்புகளை துண்டித்து விட வேண்டும். தொடா்ந்து அழைப்புகள் வந்தாா், கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இணைய வழியில் புகாரில் பதிவிடலாம் என்றாா் அவா்.