செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 885 மனுக்கள்

post image

திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 885 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள், வேளாண்மைதுறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

825 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது

விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் 7 பயனாளிகளுக்கு நவீன செய்கை அவயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மாலதி மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாற்றில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 4 பேரும், நிலம் திருத்தம் கோரி ஒருவரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 7 பேரும், பட்டா மாற்றம் கோரி 18 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 5 பேரும், நில அளவீடு செய்யக் கோரி 4 போ் என மெத்தம் 60 மனுக்கள் அளித்து இருந்தனா்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க