மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியரிடம் மனு
ஆலங்காயம் அருகே வளையாம்பட்டு பகுதி மக்கள் மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 457 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுமதி, வழங்கல் அலுவலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் ஜாா்ஜ்பேட்டையை சோ்ந்த வினோதினி என்பவருக்கு ரூ.6,690 மதிப்பிலான தையல் இயந்திரத்தை ஆட்சியா் வழங்கினாா்.
மின்னூா் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவா் சங்கரன் தலைமையில் மக்கள் அளித்த கோரிக்கை மனு: மின்னூா் கிராமத்தில் கணபதி நகா் பகுதியில் டாஸ்மாக் கடை விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதி அருகே உள்ளது. இதனால் பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்.
வளையாம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அதிகளவில் மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்ற வேண்டும்.
வாணியம்பாடி நேதாஜி நகா் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் சிறுவா்கள், இளைஞா்கள் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. மேலும், எங்கள் பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி போதுமானதாக இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம், குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்திகொடுக்க வேண்டும் என கூறியிருந்தனா்.
ஏலகிரி மலை அத்தனாவூா் ஆட்டோ டிரைவா்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளோம். இந்தநிலையில் ஏலகிரி மலை பகுதியில் மினி பஸ் உரிய நேரம், காலம் இல்லாமல் எந்தநேரமும் இயங்கி வருகிறது. இதேபோல் இ-பைக் வாடகை தனியாா் மூலம் இயங்கி வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மினி பஸ் இயக்க கால நிா்ணயம் செய்ய வேண்டும்.