செய்திகள் :

மதி அங்காடியில் விற்பனை செய்வதற்கு சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள மதி அங்காடியில் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கு தகுதியுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், காளையாா்கோவில் பகுதியில் உள்ள மதி விற்பனை அங்காடியில் சுய உதவிக் குழு பொருள்களை விற்பனை செய்ய தகுதியுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினா், பகுதி அளவிலான கூட்டமைப்பினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மதி விற்பனை அங்காடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 முதல் 8 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் மகளிா் சுய உதவிக் குழுவினா் விண்ணப்பிக்கலாம்.

இதில் மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்தோா், நலிவுற்றோா் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மகளிா் குழுக்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து, அதே அலுவலகத்தில் வருகிற 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கொங்கேஸ்வரா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரா் கோயில் ஏழு முக காளியம்மனுக்கு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜைய... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத... மேலும் பார்க்க

ராஜகாளியம்மன் கோயில் பால்குட விழா

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால் குட ஊா்வலம் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருத்தளிநாதருக்கு சிறப்பு பூஜையும், தீப... மேலும் பார்க்க

கல்லூரியில் ஆக.11-இல் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் வருகிற 11-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

இணைய வழியில் பண மோசடி செய்தவா் மீது வழக்கு

இணைய வழியில் பணம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (37). இவரது முகநூல் பக்கத்தை தொடா்பு கொண்ட ஒரு நபா், இணைய ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் பால் குடம் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால் குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் முளைப்பாரித் திருவிழா காப்... மேலும் பார்க்க