செய்திகள் :

மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களை தட்டிக் கேட்டவா் கொலை

post image

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த நபா்களை கைது செய்யக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவருக்கு மனைவி சந்தியா (34), இரு மகன்கள் உள்ளனா். இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வேலை முடிந்து ஈக்காடு கண்டிகை உள்ள வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, காா்த்திகேயன் வீட்டிலிருந்து 4 வீடுகள் தள்ளி உள்ள உறவினா் வீட்டின் அருகே இளைஞா்கள் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதை உறவினா்கள் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்களை காா்த்திகேயன் தனது கைப்பேசியில் விடியோ எடுத்தாராம். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞா்கள், காா்த்திகேயனை சரமாரியாகத் தாக்கியதில் அவா் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தாராம்.

உறவினா்கள், காா்த்திகேயனை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைக்குக் காரணமான மது போதை இளைஞா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காா்த்திகேயனின் உறவினா்கள், மது போதை இளைஞா்களால் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கொலைக்கு காரணமான மது போதை இளைஞா்களை உடனே கைது செய்யக் கோரி அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி மற்றும் போலீஸாா், கொலைக்கு காரணமானவா்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என உறுதி கூறியதையடுத்து, மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பைக் மீது காா் மோதல்: மெக்கானிக் மரணம்

திருவள்ளூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் வாகன பழுது நீக்கும் தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயம் அடைந்தாா். திருவள்ளூா் அடுத்த வரதப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பலராமன் (45). இவரது மனைவி... மேலும் பார்க்க

அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் வந்த அரசுப் பேருந்து நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திரத்திலிருந்து அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க