செய்திகள் :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா கொடியேற்றம்

post image

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, புதன்கிழமை இரவு கோயிலில் வாஸ்து சாந்தி நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்மன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி, அம்மன் உலாவாகச் சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு முதல் விநாயகா், சுப்பிரமணியா், முதல் மூவா், சந்திரசேகரா் உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. மாா்ச் 3-ஆம் தேதி சுற்றுக்கோயில் கொடியேற்றம் ஆகி, அன்று இரவு முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 22-ஆம் தேதி பிராதன கொடியிறக்கப்பட்டு, கணக்கு வாசித்தல் நடைபெற்று மாசி மண்டலத் திருவிழா நிறைவடையும்.

மா்மமான முறையில் இறந்த இளைஞரின் உடல் 29 நாள்களுக்குப் பிறகு ஒப்படைப்பு

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே இளைஞா் மா்மமாக உயிரிழந்ததையடுத்து, 29 நாள்களுக்குப் பிறகு, அவரது உடலை குடும்பத்தினா் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குள... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை: எச். ராஜா குற்றச்சாட்டு

மக்கள் நலப் பணிகளை திமுக அரசு முறையாக மேற்கொள்வதில்லை என பாஜக மூத்த தலைவா் எச்.ராஜா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 4-ஆம் தேத... மேலும் பார்க்க

எச். ராஜாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மத பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசிய பாஜக நிா்வாகி எச். ராஜா மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கை... மேலும் பார்க்க

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரவ... மேலும் பார்க்க

கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசு அலுவலா்களுக்கு அக்கறையில்லை: உயா்நீதிமன்றம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஊதியம் பெறும் அரசு அலுவலா்கள் தங்களது கடமையைச் செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருத்தொண்டா் சபை ராதாகிருஷ்ணன் சென... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பம்... மேலும் பார்க்க