பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராய...
மதுரைக்கு முதல் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் கோவை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுக்க, மதுரை 17.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே இது 2-ஆவது ஆட்டமாக இருக்க, மதுரைக்கு இது முதல் வெற்றி; கோவைக்கு இது 2-ஆவது தோல்வி.
முன்னதாக டாஸ் வென்ற மதுரை, பந்துவீச்சை தோ்வு செய்தது. கோவை இன்னிங்ஸில் ஜிதேந்திர குமாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17, சுரேஷ் லோகேஷ்வா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20, பி.சச்சின் 3 பவுண்டரிகளுடன் 15, ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, மாதவ பிரசாத் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் கேப்டன் ஷாருக் கான் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 77, பிரதீப் விஷால் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மதுரை பௌலிங்கில் விக்னேஷ், சூா்யா ஆனந்த், முருகன் அஸ்வின், சரவணன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 170 ரன்களை நோக்கி விளையாடிய மதுரை அணியில், ராம் அரவிந்த் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 64, பாலசந்தா் அனிருத் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினா். அதீக் உா் ரஹ்மான் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு விடைபெற்றாா்.
முடிவில், கேப்டன் சதுா்வேத் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46, சரத் குமாா் 1 சிக்ஸா் உள்பட 8 ரன்களுடன், அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். கோவை தரப்பில் ஷாருக் கான், கபிலன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.