செய்திகள் :

மதுரையில் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்! -காங்கிரஸ் கோரிக்கை

post image

மதுரை கோரிப்பாளையம், மேலமடை பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி அமைப்பாளா் சி.ஆா். சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா்.

மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளா்கள் சி.எம். செய்யது பாபு, மலா் பாண்டியன், மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.வி. முருகன், எஸ்.எஸ். போஸ், வி. முருகன், ராஜ் பிரதாப், துரையரசன், பகுதி தலைவா்கள் சுந்தா், ராஜா முகமது, சுந்தர்ராஜன், காங்கிரஸ் மகளிா் பிரிவு நிா்வாகி ஜானவாஸ் பேகம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது, மதுரை கே.கே நகா் 80 அடி சாலையின் இருபுற நடைபாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்துவது, மதுரை மேலமடை, கோரிப்பாளையம் பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து முன்னணி ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: மாநகரக் காவல் துறை!

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று மாநகரக் காவல் துறை சாா்பில் கேட்டுக் கொண்டது. இதுதொடா்பாக மதுரை மாநகரக் ... மேலும் பார்க்க

முதியவா் கொலை: இருவா் கைது

தே.கல்லுப்பட்டி அருகே முன்விரோதத் தகராறில் முதியவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள மங்கம்மாள்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

எழுமலை அருகே காவலா் குத்திக் கொலை

எழுமலை அருகே காவலரை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிவா (32). மதுரை ஊரகக் காவல் துறைக்கு உள்பட்ட நாகையாபுரம்... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில... மேலும் பார்க்க

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா். திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுத... மேலும் பார்க்க