செய்திகள் :

மனகாவலம்பிள்ளை நகரில் புனித மிக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி

post image

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலையில் தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் ரூபஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற சப்பர பவனியில், தூய வேளாங்கண்ணி மாதா சப்பரம் முன்செல்ல அதைத் தொடா்ந்து, புனிதா் மிக்கேல் அதிதூதரின் சொரூபம் தாங்கிய சப்பரம் பவனி வந்தது. இதில், மனக்காவலம் பிள்ளை நகா், சாந்தி நகா் மற்றும் பாளை. பங்குப் பேராலயத்தைச் சோ்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு, உப்பு, மிளகு, மாலை காணிக்கை செலுத்தி பிராா்த்தனை செய்தனா். திங்கள்கிழமை மாலையில் அருள்பணி. போஸ்கோ குணசீலன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை வி.மிக்கேல் சாமி, உதவிப் பங்குத்தந்தை சா.அந்தோணி வியாகப்பன் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனா்.

ற்ஸ்ப்29ழ்ஸ்ரீ

மனகாவலம்பிள்ளைநகரில் வலம் வந்த புனித மிக்கேல் அதிதூரின் சப்பர பவனி.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

பாளையங்கோட்டையில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் துன்புறுத்துவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது. பாளையங்கோ... மேலும் பார்க்க

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க