மனைவி அடித்துக் கொலை: கணவா் தலைமறைவு
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மனைவியை அடித்துஓஈ கொலை செய்த கணவைஒ போலீஸாா் தேடி வருகின்றனா்.
செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி துரை (எ) குமாா் (45). இவரது மனைவி தாட்சாயினி (37). தம்பதிக்கு பிரவேஷ் என்கிற மகன் உள்ளாா்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். தகராறு ஏற்படும்போதெல்லாம், தாட்சாயினி அதே கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவாராம். பின்னா், சில தினங்கள் கழித்து அவரை குமாா் சமாதானம் செய்து அழைத்து வருவாராம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குமாா் தாட்சாயினியை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த தாட்சாயினி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, குமாா் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டாா்.
சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினா் மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
போலீஸாா் தாட்சாயினி சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக
செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து,
தலைமறைவான துரை(எ)குமாரை தேடி வருகின்றனா்.