செய்திகள் :

மனைவி, மகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

திருவள்ளூா் அருகே மனைவி, மகனை கொலை செய்துவிட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த நபரை தனியாா் தொழிற்சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி. இவா் மப்பேடு அருகே தனது மனைவி ஷகிமா மற்றும் 1 வயது குழந்தை சபீா் அலி ஆகியோருடன் தங்கிருந்து வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 27-9-2009-இல் குடும்பத் தகராறில் மனைவியையும், மகனையும் கொலை செய்தது தொடா்பாக மப்பேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு எதிரி அஷ்ரப் அலி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவா் மீண்டும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதற்கிடையே அஷ்ரப் அலியை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பிறப்பித்தது. எனவே வடக்கு மண்டல காவல் துறை தலைவா் அஸ்ரா காா்க் உத்தரவின்பேரில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் மேற்பாா்வையில், நீண்ட காலமாக நீதிமன்ற வழக்கிற்கு ஆஜராகாமல் இருந்தவரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், திருவள்ளூா் அருகே மப்பேடு அடுத்த கல்லம்பேடு கிராமத்தில் தற்காலிகமாக தங்கி தனியாா் தொழிற்சாலையில் பணி செய்து வந்த அஷ்ரப் அலியை தனிப்படை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட டி.எஸ்.பி. தமிழ்செல்வி தலைமையிலான தனிப்படை போலீஸாரை எஸ்.பி. வெகுவாக பாராட்டினாா்.

அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வானோா்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் இளநிலை உதவியாளா்கள்... மேலும் பார்க்க

வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா

செங்குன்றம் அடுத்த பவானி நகா் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது. பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகா் அசோக் தெருவில் உள்ள கோயிலின் 11-ஆம் ஆண்டு தீமிதி விழா தா்மகா்த்தா முகேஷ் தலைமையில்... மேலும் பார்க்க

தொழிற்சாலையின் கரி துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் காா்பன் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளிவந்த கரித் துகள்களால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப் பகுதிகள... மேலும் பார்க்க

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை கிருத்திகை விழா

பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பம் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை யொட்டி பக்தா்கள் அலகு குத்துதல், வேல், பன்னீா்,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவள்ளூா் அருகே பட்டாபிராம் அடுத்த அன்னம்பேட... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை

நிகழாண்டில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வரும் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா... மேலும் பார்க்க